Showing posts with label தீர்மானங்கள். Show all posts
Showing posts with label தீர்மானங்கள். Show all posts

Sunday, September 8, 2019

இலங்கை திட்டமிடல் சேவை

இலங்கை திட்டமிடல் சேவை


பணிநோக்கு

நிர்வாக ஏற்பாடுகள் மற்றும் ஒழுங்குவிதிகள் உரிய முறையில் செயற்படுத்துதல் மற்றும் புதிய கொள்கைகளினை அறிமுகப்படுத்துதல், உத்தியோகத்தர்களின் இயலளவினை அபிவிருத்தி செய்வதன் மூலம் உற்பத்தித்திறன் வாய்ந்த திட்டமிடல் சேவையினை நாட்டிற்குப் பெற்றுக்கொடுத்தல்.

நோக்கம்

திட்டமிடல் சேவையில் மனிதவள முகாமைத்துவக் கொள்கைகளினை தயாரித்தல்​

பொதுமக்களின் தேவைகளை நிறைவேற்றும் வகையில், வினைத்திறனுள்ள திட்டமிடல் சேவையொன்றினை உருவாக்குதல்.

பிரதான நடவடிக்கைகள்
ஆட்சேர்ப்பு செய்தல்
சேவையினை நிரந்தரமாக்குதல்
பதவியுயர்வுகளை பெற்றுக்கொடுத்தல்
​​​​இடமாற்றங்களை பெற்றுக்கொடுத்தல்
வினைத்திறன் தடைதாண்டல் பரீட்சைகளை நடாத்துதல்
சேவையினை நீடித்தல் மற்றும் ஓய்வு பெறச்செய்தல்


ஆட்சேர்ப்புச் செய்தல்

பதவி மற்றும் நிறுவனம் அடிப்படையில் வெற்றிடங்களை இனங்காணுதல்
முகாமைத்துவ சேவை திணைக்களத்தின் அனுமதியினைப் பெற்றுக்கொள்ளல்.
ஆட்சேர்ப்பிற்கான வர்த்தமானி அறிவித்தல்களை வெளியிடுதல்
>தெரிவிற்கான பரீட்சைகளினை நடாத்துதல்
நேர்முகப்பரீட்சையின் மூலம் விண்ணப்பதாரியின் தகைமைகளைப் பரீட்சித்து உறுதிப்படுத்திக் கொள்ளல்
அரசாங்க சேவை ஆணைக்குழுவின் அனுமதியினைப் பெற்றுக்கொள்ளல்


சேவையினை நிரந்தரமாக்குதல்


  • சேவை வழங்குனரினால் சேவை தளத்திலிருந்து பரிந்துரையினைப் பெற்றுக்கொடுத்தல்
  • அரசாங்க நிர்வாக செயலாளரின் பரிந்துரையினை அரசாங்க சேவை ஆணைக்குழுவிற்குப் பெற்றுக்கொடுத்தல்


பதவியுயர்வுகள்

​சேவை வழங்குனரினால் சேவை தளத்திலிருந்து பரிந்துரையினைப் பெற்றுக்கொடுத்தல்
அரசாங்க நிர்வாக செயலாளரின் பரிந்துரையினை அரசாங்க சேவை ஆணைக்குழுவிற்குப் பெற்றுக்கொடுத்தல்


இடமாற்றங்களை பெற்றுக்கொடுத்தல்

வருடாந்த இடமாற்றக் கொள்கைகளினைச் செயற்படுத்துதல்
சேவை அவசியங்களி​​னை கருத்திற் கொண்ட இடமாற்றம் செய்தல்


வினைத்திறன் தடைதாண்டல் பரீட்சைகளை நடாத்துதல்

வினைத்திறன் தடைதாண்டல் பரீட்சைகளின் பெறுபேறுகளை வெளியிடுதல்​
பதவியுயர்வுகளைப் பெற்றுக்கொடுத்தல்


சேவையினை நீடித்தல் மற்றும் ஓய்வு பெறச்செய்தல்

சேவை வழங்குனரினால் சேவை தளத்திலிருந்து பரிந்துரையினைப் பெற்றுக்கொடுத்தல்
அரசாங்க சேவை ஆணைக்குழுவின் பரிந்துரையினை பெற்றுக்கொடுத்தல்

Sunday, August 18, 2019

சட்டம் பற்றிய அறிஞர்களின் வரைவிலக்கணங்கள்:

சட்டம் பற்றிய அறிஞர்களின் வரைவிலக்கணங்கள்:





  • அரிஸ்ரோட்டில்: சமூக நலனுக்கு இடைஞ்சலான தனிப்பட்டவர்களின் விருப்பங்கள் அல்லது செயற்பாடுகள் மீது விதிக்கப்படும் ஒரு தடையே சட்டமாகும்.

  • ஸஸ்மன்ட்: நீதி நிர்வாகத்தை மேற்கொள்வதற்கு அரச அதிகாரத்துடன் நிறைவேற்றப்பட்டதும் நிறைவேற்றப்படுவதற்குமான கோட்பாடுகளின் தொகுதியே சட்டமாகும்.

  • தொமஸ்ஹொப்ஸ் : கீழ்ப்படிந்தாக வேண்டும் என்பதற்கான காரணக்கூறுடைய விதத்தில் ஒருவர் இடும் உத்தரவு தான் சட்டமாகும்.

  • ஹொல்ன்ட் : இறைமை அதிகாரம் கொண்ட அரசியல் நிறுவனத்தினால் மனிதனின் புற நடத்தையைக் கட்டுப்படுத்த செயற்படுத்தப்படும் விதிகளின் தொகுதி சட்டம் எனப்படும்.

  • ஒஸ்டின்: இறைமையின் கட்டளையே சட்டமாகும்.

  • கிறீன்: அரசாங்கத்தின் உரிமையையும் எண்ணத்தையும் பிரதிபலிக்கும் முறையே சட்டம் ஆகும்.

  • வில்சன்: வழக்கங்கள், வழக்காறுகள் ஆகிய ஒழுங்குபடுத்தும் விதிகள் அரசாங்கத்தின் சக்தியோடு இணைந்தால் அதுவே சட்டம் ஆகும்.

  • ஜோன்எர்ஸ்கின் : தன்னுடைய மக்களைக் கீழ்படிந்து நடக்கும்படி செய்ய ஓர் அரசன் பிறப்பிக்கும் வாழ்க்கைப் பொதுவிதி அடங்கிய ஆணை சட்டமாகும்.

  • வூட்றோ வில்சன்: சட்டம் என்பது அரசின் அதிகாரத்தையும் வலிமையையும் பக்கபலமாகக் கொண்டு ஒரே மாதிரியாக ஏற்றுக்கொள்ளப்பட்ட தெளிவான விதிமுறைகளாகும்.



சட்டத்தின் பண்புகள்

இறைமை அதிகாரத்தின் அடிப்படையில் அரசினால் பிறப்பிக்கப்படுவதாகக் காணப்படுதல்.

மனிதரின் சமூக இருப்பின் வெளிவாரியான செயற்பாடுகளை மட்டும் கட்டுபடுத்துவதோடு தொடர்புபடுதல்.

சமூகப் பொது நன்மையை மட்டும் இலக்காகக் கொண்டிருத்தல்.

சட்டத்தை மீறினால் தண்டனைக்குட்பட வேண்டி இருத்தல்.

மாற்றமுறும் சமூக நிலைகளுக்கேற்ப காலத்திற்கு காலம் மாற்றமடைதல்.

சட்டம் அனைவருக்கும் பொதுவானதாக இருத்தல்.

தனிப்பட்டவர்களின் தேவைகளுக்காக விரும்பியவாறு மாற்றியமைக்க முடியாதிருத்தல்.
சட்டம் தெளிவாகவும் குழப்பமின்றியும் இருத்தல் வேண்டும்..

சட்டம் சமூகத்திலிருந்து தோற்றம் பெறுகின்றது.

சமயத்துடனும் ஒழுக்கத்துடனும் தொடர்பைக் கொண்டிருக்கின்றது.

சட்டத்தின் மூலாதாரங்கள்
சட்டமன்றம்
நீதிமன்றத் தீர்ப்புகள்
வழக்காறுகள்
சட்டவல்லுனர்களின் கருத்துகள்
மதம்
நியாய அல்லது சமநீதி

சட்டத்தின் வகைகள்

தேசிய சட்டம்
பொதுச்சட்டம்
அரசியல் யாப்புச் சட்டம்
குற்றவியல் சட்டம்
நிர்வாக சட்டம்
குடியியல் சட்டம் (தனியார் சட்டம்)
சர்வதேச சட்டம்

சட்டம் என்பது இறையின் ஆணையாகும். அவற்றிற்கு அடிபணியாவிட்டால் தண்டனைக்கு ஆளாக நேரிடும். அவ்வாறு தண்டிக்கப்படுவதற்குப் பயந்தே சட்டத்திற்கு அடிபணிகின்றனர்.


இலங்கை அரசாங்கம் அவசரகால அதிகாரங்களை புதிய வடிவில் புதுப்பிக்கின்றது

இலங்கை அரசாங்கம் அவசரகால அதிகாரங்களை புதிய வடிவில் புதுப்பிக்கின்றது

இலங்கை ஜனாதிபதி மஹிந்த இராஜபக்ஷ, நீண்டகாலமாக அமுலிலிருந்த அவசரகால விதிகள் கடந்த மாதம் காலவதியாகியதைத் தொடர்ந்து, பாதுகாப்பு படைகளுக்கு அதே ஒடுக்கு முறை அதிகாரங்களை வழங்குகுவதற்காக, புதிய விதிகளை  அமுல்படுத்தியுள்ளதோடு பழைய பொலிஸ்-அரச சட்டங்களை புதுப்பித்துள்ளார்.



முதலாவதாக, விசாரணையின்றி நீண்ட நாட்கள் தடுத்து வைக்க அனுமதிக்கும் பயங்கரவாத தடைசட்டத்தின் கீழ் புதிய விதிகளை சேர்ப்பதாக ஜனாதிபதி ஆகஸ்ட் 29 திகதியிடப்பட்ட நான்கு அறிவித்தல்களை விடுத்தார். 2009ல் இராணுவ ரீதியில் தோற்கடிக்கப்பட்ட பிரிவினைவாத தமிழீழ விடுதலைப் புலிகள் மீதான தடையை நீடிப்பதும், மற்றும் புனர்வாழ்வு முகாங்கள் என சொல்லப்படுபவற்றில் “புலி சந்தேக நபர்களாக” உள்ள தமிழ் இளைஞர்களை தடுத்துவைப்பதை நீடிப்பதும் இந்த பிரகடனங்களில் அடங்கும்.



 “புணர்வாழ்வுக்காக” கிட்டத்தட்ட 6000 பேர் தடுத்து வைக்கப்பட்டுள்ளார்கள். எவர் மீதும் எந்தக் குற்றமும் சுமத்தப்படவில்லை. பயங்கரவாத தடைச் சட்டத்தின் கீழ், பலவந்தமாக பெற்றுக்கொள்ளும் ஒப்புதல் வாக்குமூலத்தை “சந்தேக நபர்களுக்கு” எதிராக நீதி மன்றத்தில் உபயோகிக்க முடியும். அத்தகைய வழக்குகளில் குற்றம் சாட்டப்பட்டுள்ளவருக்கே உண்மையை நிரூபிக்கும் பொறுப்பு உண்டு –வேறு வார்த்தைகளில் சொன்னால், தாம் அப்பாவி என்பதை அவர்கள் நிரூபிக்கத் தவறினால், அவர்கள் மீது குற்றத் தீர்ப்பளிக்கப்படும்.  



அரசாங்கம் அரசியலமைப்பையும் சட்ட முறைமையையும் அலட்சியம் செய்வதை வெளிச்சம் போட்டுக் காட்டும் வகையில், ஜனாதிபதியின் அறிவித்தல்கள் வெறுமனே விடுக்கப்பட்டதோடு கடந்த வாரம் வரை சட்டத்தில் குறிப்பிடப்பட்டுள்ளவாறு முறையாக வர்த்தமாணியில் பிரசுரிக்கப்பட்டிருக்கவில்லை. 



இரண்டாவதாக, இராஜபக்ஷ செப்டெம்பர் 3 அன்று இன்னுமொரு பொது அறிவித்தலை விடுத்தார். அரசுக்கு சொந்தமான பிரதான சக்தி விநியோகிஸ்தரான இலங்கை மின்சார சபையை கட்டாய சேவையாக பிரகடனப்படுத்தி, அதன் மூலம்  மின்சார சபை ஊழியர்களின் சகல தொழிற்சங்க நடவடிக்கைகளையும் சட்ட விரோதமாக்கினார். அருந்தையாக பயன்படுத்தப்பட்டிருந்த 1979ம் ஆண்டு அத்தியாவசிய பொதுச் சேவை சட்டத்தின் கீழ் கட்டளை ஒன்றை பிறப்பித்த ஜனாதிபதி, மின்சாரசபை தொழிற்சங்கம் செப்டெம்பர் 7 அன்று திட்டமிட்டிருந்த ஒருநாள் வேலை நிறுத்தத்தையும் தடை செய்தார்.



கடந்த காலத்தில் அரசாங்கங்கள் அவசரகால சட்ட விதிகளை இதே நோக்கத்திற்காக பிரயோகித்துள்ளன. 1979 சட்டத்தைப் பயன்படுத்துவதில் உள்ள ஒரே வரையறை, அது பொதுத் துறை ஊழியர்களை மட்டுமே உள்ளடக்கியிருப்பதாகும்.



புதிதாக அறிவிக்கப்பட்டுள்ள விதிகளின் கீழ், நிறுவனம் வழங்கிய வேலைக்கு “முட்டுக்கட்டை” இடும் வகையில் வேலை நிறுத்தம் செய்யும் எவரும், ஏனைய தொழிலாளர்களை தொழிற்சங்க நடவடிக்கையில் ஈடுபடுமாறு அழுத்தம் கொடுக்கும் அல்லது “அத்தகைய ஒரு நடவடிக்கையை எழுத்து மூலம் மற்றும் பேச்சின் மூலம் தூண்டிவிடும்” எவரும் கடுமையான தண்டனைக்கு உள்ளாக்கப்படுவார்.



இரண்டு அல்லது ஐந்து ஆண்டு கடும் சிறைத்தண்டனை மற்றும்/அல்லது ரூபா 5,000 வரை தண்டமும் தண்டனையில் அடங்கும். குற்றவாளியாக்கப்படும் நபரின் சொத்துக்களை பறிமுதல் செய்யவும் முடியும். தொழிற்சங்கத்தின் தீர்மானத்தை பின்பற்றியே ஊழியர் தொழிற்சங்க நடவடிக்கையில் ஈடுபட்டார் என்ற கூற்றின் அடிப்படையிலான எந்தவொரு பாதுகாப்பையும் இந்தச் சட்டம் திட்டவட்டமாக நிராகரிக்கின்றது.  



மூன்றாவதாக, சந்தேக நபர்களை தடுத்து வைத்திருக்கும் காலத்தை 24 முதல் 48 மணித்தியாலம் வரை நீடிக்க பொலிசுக்கு அதிகாரத்தை பலப்படுத்துவதற்காக நாட்டின் குற்றவியல் பிரிவில் திருத்தம் செய்ய அரசாங்கம் செப்டெம்பர் 5 அன்று முயற்சித்தது. இந்த திருத்தம் ஆரம்பத்தில் 2007ல் ஒரு தற்காலிக நடவடிக்கையாக நிறைவேற்றப்பட்டு 2009ல் கிடப்பில் வைக்கப்பட்டது. எதிர்க் கட்சி இந்த புதிய திருத்தத்தின் சட்டப்பூர்வத் தன்மையை எதிர்த்ததை அடுத்து, ஆளும் கூட்டணி பின்வாங்கிய போதும், இந்த நடவடிக்கையை அமுல்படுத்துவதற்கான விதிகளை துரிதமாக அமுல்படுத்த சபதம் பூண்டது.



நான்காவதாக, இராஜபக்ஷ "பொது ஒழுங்கை பேணுவதற்காக" நாட்டின் 22 மாவட்டங்களிலும் முப்படைகளையும் அழைப்பதற்கு பொதுப் பாதுகாப்புச் சட்டத்தின் கீழ் ஒரு கட்டளையை பிறப்பித்துள்ளதாக செப்டம்பர் 7 அன்று பாராளுமன்றத்தின் கவனத்திற்குக் கொண்டுவந்தார்.



இந்த கட்டளை, குறிப்பாக தீவின் வடக்கு மற்றும் கிழக்கில் போல், விளைபயனுள்ள ஒரு இராணுவ ஆக்கிரமிப்பை பேணுகின்றது. இந்த பொதுப் பாதுகாப்புச் சட்டம், யுத்த கால பாதுகாப்பு சோதனை நிலையங்களையும் ரோந்து நடவடிக்கைகளையும் தொடர்வதற்கும், பொது மக்களின் அமைதியின்மையை நசுக்குவதற்கு இராணுவத்தை பயன்படுத்தவும் அரசாங்கத்துக்கு அதிகாரமளிக்கின்றது. இந்த சட்டத்தின் கீழ் கடமைக்கு அழைக்கப்படும் இராணுவ உத்தியோகத்தர்களுக்கு தேடுதல் மற்றும் கைது நடவடிக்கைகளை மேற்கொள்ளும் பரந்த அதிகாரம் உண்டு.



இராஜபக்ஷ ஒரு இராஜதந்திர செப்படி வித்தையில் ஈடுபட்டுள்ளார். அரசாங்கம் அவசரகாலச் சட்டத்தை முடிவுக்கு கொண்டுவந்தது, அதற்கு ஜனநாயகத்தின் மீது திடீரென தோன்றிய அக்கறையினால் அல்ல. மாறாக, ஜெனீவாவில் திங்கட் கிழமை தொடங்கிய ஐ.நா. மனித உரிமைகள் பேரவையின் 18வது அமர்வுக்கு முன்னதாக, தனது யுத்தக் குற்றம் மற்றும் ஜனநாயக உரிமை மீறல்கள் பற்றிய சர்வதேச விமர்சனங்களை மழுங்கலாக்குவதற்காகவே அதைச் செய்தது.



அரசாங்கம், புலிகளுக்கு எதிரான உள்நாட்டு யுத்தத்தின் கடைசி மாதங்களில் இலங்கை இராணுவத்தல் செய்யப்பட்ட யுத்தக் குற்றங்கள் பற்றிய "நம்பகமான ஆதாரங்களை" கண்டுபிடித்த, ஐ.நா. செயலாளர் நாயகம் பான் கீ மூனால் நியமிக்கப்பட்ட நிபுணர்கள் குழு முன்வைத்துள்ள அறிக்கையை கலந்துரையாடுவதை தவிர்ப்பதற்காக ஏங்கிக்கொண்டிருந்தது.



இராஜபக்ஷவின் இனவாத யுத்தத்துக்கு ஆதரவளித்ததோடு பல ஆண்டுகளாக அதன் யுத்தக் குற்றங்களை கண்டும் காணாதது போல் இருந்த, அமெரிக்க, இந்திய மற்றும் ஐரோப்பிய சக்திகள், இலங்கையை சீனாவிடம் இருந்து விலகிக்கொள்ளுமாறு அரசாங்கத்துக்கு அழுத்தம் கொடுப்பதன் பேரில் ஜனநாயக உரிமைகள் சம்பந்தமான விவகாரத்தை பற்றிக்கொண்டன.



அமெரிக்கா, இந்தியா மற்றும் ஐரோப்பிய ஒன்றியமும், அவசரகாலச் சட்டத்தை முடிவுக்கு கொண்டுவருமாறும் துஷ்பிரயோக குற்றங்கள் சம்பந்தமாக நம்பகமான விசாரணைகளை நடத்துமாறும் இராஜபக்ஷவுக்கு அறிவுறுத்தின. அரசாங்கம் நியமித்துள்ள கற்றுக்கொண்ட பாடங்கள் மற்றும் நல்லிணக்க ஆணைக்குழுவானது போலியானதாகும். அது யுத்தத்தின் போது அரசாங்கத்தினதும் இராணுவத்தினதும் நடவடிக்கைகளை பூசி மெழுகுவதற்காக அது நியமித்துள்ளவர்களுடன் மூழ்கிப் போயுள்ளது.



அவசரகாலச் சட்டத்தை ஓரங்கட்டியுள்ள இராஜபக்ஷவுக்கு, கால் நூற்றாண்டு கால யுத்தத்தின் போது கட்டியெழுப்பப்பட்ட பரந்த பொலிஸ்-அரச இயந்திரத்தை கலைத்துவிடும் எண்ணம் கிடையாது. சர்வதேச நாணய நிதியம் கட்டளையிட்டுள்ள சிக்கன நடவடிக்கைகளை அமுல்படுத்தும் போது, அது சமூகப் பிளவை ஆழப்படுத்துவதோடு தொழிலாளர்கள், இளைஞர்கள் மற்றும் நகர்ப்புற, கிராமபபுற வறியவர்கள் மத்தியில் அதிருப்தியை குவிக்கும் என்பதையிட்டு அரசாங்கம் மிகவும் விழிப்புடன் இருக்கின்றது.



குறிப்பாக, மின்சார சபை ஊழியர்கள் மீதான அத்தியாவசிய சேவை கட்டளையை அமுல்படுத்துவது, முழு தொழிலாள வர்க்கத்துக்கும் ஒரு எச்சரிக்கையாகும். யுத்த காலத்தில் வேலை நிறுத்தம் செய்த தொழிலாளர்களுக்கு எதிராக இராணுவத்தை பயன்படுத்தத் தயக்கம் காட்டாத அரசாங்கம், அத்தியாவசிய சேவைகளை பேணுதல் என்ற பெயரில் பொதுச் சேவைகள் சட்டத்தின் கீழ் மீண்டும் அதைச் செய்யும்.



பொதுப் பாதுகாப்பு சட்டத்தின் கீழ் இராணுவத்தை நிலைகொள்ளச் செய்வது பற்றிய பாராளுமன்ற விவாதத்தில் அரசாங்கத்தின் நடவடிக்கையை நியாயப்படுத்திய அமைச்சரவை அமைச்சர் நிமல் சிறிபால டி சில்வா, "பொதுப் பாதுகாப்பை உறுதிப்படுத்த எதிர்காலத்தில் பயங்கரவாத அச்சுறுத்தல்களின் சாத்தியங்களை தவிர்ப்பதற்கு எமக்கு அவை [அத்தகைய சட்டங்கள்] தேவை," என்றார். மேலதிக நியாயப்படுத்தலாக, அமெரிக்க தேசப்பற்று சட்டத்தை மேற்கோள் காட்டிய அவர், "அதன் கீழ் யாரும் கைதுசெய்யப்பட்டால், அவருக்கு அல்லது அவளுக்கு என்ன நடக்கும் என்பது எமக்குத் தெரியாது" என சுட்டிக்காட்டினார்.



மின்சார சபை ஊழியர்களுக்கு எதிரான அத்தியாவசிய சேவை கட்டளை அமுல்படுத்தப்பட்டதை எந்தவொரு தொழிற்சங்கமும் எதிர்க்கவில்லை. மின்சார சபை தொழிற்சங்கங்கள் மத்தியில் முன்னணியில் உள்ள, எதிர்க் கட்சியான மக்கள் விடுதலை முன்னணியின் (ஜே.வி.பீ.) கட்டுப்பாட்டிலான இலங்கை மின்சாரசபை ஊழியர்கள் சங்கமும் இதில் அடங்கும். இந்த தொழிற்சங்க கூட்டமைப்பு, கடந்த ஜனவரியில் இருந்து நிறுத்தி வைக்கப்பட்டிருந்த சம்பள மிச்சத்தை கொடுப்பதாக அமைச்சர் வாக்குறுதியளித்துள்ளதாக தெரிவித்து, செப்டெம்பர் 7 அன்று வேலை நிறுத்தத்தை சாதாரணமாக முடிவுக்குக் கொண்டுவந்தது.



புதிதாக விதிகளும் கட்டளைகளும் வரும்போது அவற்றை அடக்கமாக ஏற்றுக்கொள்வதே ஜே.வி.பீ. மற்றும் ஐக்கிய தேசியக் கட்சி (யூ.என்.பீ.) போன்ற எதிர்க் கட்சிகளின் பிரதிபலிப்பாக உள்ளது. அவர்கள் எப்போதாவது ஜனநாயக உரிமைகளை காப்பவர்களாக காட்டிக்கொள்வது முற்றிலும் வஞ்சகமானதாகும். அவர்கள் இனவாத யுத்தத்தை முழுமையாக ஆதரித்ததோடு புலிகள் தோற்கடிக்கப்பட்ட பின்னரும், அவசரகாலச் சட்டம் மாதாமாதம் நீடிக்கப்படுவதற்கு வாக்களித்தனர். இரு கட்சிகளும் இப்போது தாம் எதிர்க்கும் பொலிஸ் அதிகாரங்களை விரிவுபடுத்துவதற்கு ஆதரவாக 2007ல் வாக்களித்தன. அடிப்படை ஜனநாயக உரிமைகள் மற்றும் சட்ட ஒழுக்கங்களை பாதுகாப்பதற்கு கொழும்பு அரசியல் ஸ்தாபனத்தில் ஒருவரும் கிடையாது என்ற உண்மையையே இந்தச் சாதனைகள் கோடிட்டுக் காட்டுகின்றன.

Saturday, August 17, 2019

13.08.2019 அன்று இடம்பெற்ற அமைச்சரவைக் கூட்டத்தின் போது மேற்கொள்ளப்பட்ட தீர்மானங்கள் பின்வருதமாறு:

13.08.2019 அன்று இடம்பெற்ற அமைச்சரவைக் கூட்டத்தின் போது மேற்கொள்ளப்பட்ட தீர்மானங்கள் பின்வருதமாறு:

01. வருமானத்திற்கு சாத்தியமான முறையில் பயன்படுத்துவதற்காக நெல் உற்பத்தியாளர்கள் மத்தியில் உலர்த்தல் தொழில்நுட்பத்தை பிரபல்யப்படுத்துதல் (நிகழ்ச்சி நிரலில் 10ஆவது விடயம்)

நெல்லைகுற்றிய பின்னர் பாதுகாப்பாக களஞ்சியப்படுத்துவதற்காக உயர் தரத்திலான ஈரலிப்புத் தன்மையுடன் அறுவடை செய்யப்பட்ட நெல் அறுவடையை உரிய வகையில் உலர்த்த வேண்டும். இருப்பினும் உலர்த்துவதற்கு தாமதமாதல் முழுமையற்ற வகையில் உலர்த்தல் சீரற்றதாக உலர்த்தல் என்ற அடிப்படையில் எதிர்பார்த்த தரம் இல்லாமையினால் நெல்லை குறைந்த விலைக்கு விற்பனை செய்யும் நிலை விவசாயிகளுக்கு ஏற்படுகின்றது. இதனால் வாழ்க்கை செலவு தொடர்பான அமைச்சரவையின் துணைக்குழுவின் ஆலோசனைக்கு அமைய நியமிக்கப்பட்ட செயற்பாட்டு குழுவினால் சிபாரிசு செய்யப்பட்ட வகையில் உலர்த்தலுக்கான தொழில்நுட்பத்தை விவசாயிகள் அறிந்துகொள்ளுவதற்கான முன்னோடித்திட்டமொன்று உயர் தரத்திலான உற்பத்திக்கு உரிமைகோரும் வருடத்தில் 2 முறை நெல் உற்பத்தியில் ஈடுபடும் பொலன்னறுவை மாவட்ட விவசாயிகள் மத்தியில் நடைமுறைப்படுத்துவதற்கு ஆலோசிக்கப்பட்டுள்ளது. இதற்கமைவாக நாடு தழுவிய ரீதியில் நெல் ஆலை உரிமையாளர் சங்கத்தின் ஒத்துழைப்புடன் விவசாய சேவை திணைக்களத்தினால் தெரிவுசெய்யப்பட்ட பொலன்னறுவை மாவட்டத்தின் 5 விவசாய அமைப்புக்களுக்கு வரியற்ற 3 மில்லியன் ரூபா பெறுமதியான 2 மெற்றிக் தொன் வலுவைக் கொண்ட நடமாடும் நெல் உலர்த்தி மற்றும் வட்டியற்ற 6 மில்லியன் ரூபா பெறுமதியான 6 தொன் வலுவைக் கொண்ட நிலையான உலர்த்தியொன்று வீதம் அரசாங்கத்தினால் பொறுப்பேற்கப்படும் செலவை மீண்டும் அறவிடும் பொறிமுறை ஒன்றுடன் வழங்குவதற்கு அமைச்சரவை அந்தஸ்து அற்ற பொருளாதார மறுசீரமைப்பு மற்றும் பொது விநியோகத்துறை அமைச்சரின் கோரிக்கைக்கு அமைய அதிமேதகு ஜனாதிபதி மைத்திராபால சிறிசேன அவர்கள் சமர்ப்பித்த ஆவணத்திற்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது.

02. தற்பொழுது உள்ள சதுப்பு நிலங்களை பாதுகாத்தல் மற்றும் இறால் உற்பத்தி மற்றும் உப்பளங்கள் போன்ற நடவடிக்கைகளுக்காக பயன்படுத்தப்பட்டு கைவிடப்பட்டுள்ள அரசாங்கத்திற்கு உட்பட்ட சதுப்பு நிலங்களை புனரமைத்தல் (நிகழ்ச்சி நிரலில் 11ஆவது விடயம்)
அரசாங்கத்திற்கு உட்பட்ட ஈரலிப்புடனான வன பாதுகாப்பு திணைக்களம் மற்றும் வனவிலங்கு பாதுகாப்ப திணைக்களத்தின் கீழ் நிர்வகிக்கப்படும் காணியை ஏனைய அபிவிருத்திப் பணிக்காக விடுவிக்காதிருப்பதற்கும் நீர் உயிரின உற்பத்திக்காக தற்பொழுது அறிமுகப்படுத்தப்பட்டுள்ள காணி தொடர்பில் பணியாற்றும் பொழுது சம்பந்தப்பட்ட அமைச்சு திணைக்களம் மற்றும் ஏனைய நிறுவனங்களின் பிரதிநிதிகளைக் கொண்ட குழுவொன்றின் மூலம் முறையான மதிப்பீடுகளை மேற்கொண்டு அதற்கமைவாக காணிகளை விடுவிப்பது தொடர்பிலான தீர்மானத்தை எட்டுவதற்கும் நீர்வாழ் உயிரின உற்பத்தி மற்றும் உப்பளங்கள் போன்ற பணிகளுக்காக அரசாங்கத்தினால் குத்தகை ஒப்பந்தத்தின் கீழ் வழங்கப்பட்டுள்ள காணிகளில் சம்பந்தப்பட்ட பணிக்காக பயன்படுத்தப்படாது கைவிடப்பட்டுள்ள காணிகளுக்காக வழங்கப்பட்டிருந்த காணிகளின் குத்தகை ஒப்பந்தத்தை மேலும் நீடிக்காது இந்த காணிகளில் உள்ள ஈரலிப்புடனான வனப்பகுதியை ஸ்தாபிப்பதற்காக வனப்பாதுகாப்பு திணைக்களத்திற்கு வழங்குவதற்கான நடவடிக்கையை மேற்கொள்ளுமாறு பிரதேச செயலாளர்களுக்கும் காணி ஆணையாளர் நாயகத்திற்கும் உத்தரவு பிறப்பிப்பதற்கும் தற்பொழுது முன்னெடுக்கப்பட்டு வரும் ஈரலிப்புடனான காணியின் அளவை 10ஆயிரம் ஹெக்டர் ஆக அதிகரிப்பதற்காக விசேட வேலைத்திட்டமொன்றை நடைமுறைப்படுத்துமாறு சம்பந்தப்பட்ட திணைக்களங்களுக்கு அறிவிப்பதற்காக மகாவலி அபிவிருத்தி மற்றும் சுற்றாடல் துறை அமைச்சரினால் சமர்ப்பிக்கப்பட்ட ஆவணத்திற்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது.


03. சுற்றுலா துறையில் புரிந்துணர்வு தொடர்பில் இலங்கை ஜனநாயக சோசலிச குடியரசிக்கும் கம்போடியா அரசாங்கத்திற்குமிடையில் புரிந்துணர்வு உடன்படிக்கையை மேற்கொள்ளல். (நிகழ்ச்சி நிரலில் 16ஆவது விடயம்)
சமமான மற்றும் பரஸ்பர நலனடிப்படையில் சுற்றுலா துறையில் புரிந்துணர்வை மேம்படுத்துவதன் மூலம் இருநாடுகளுக்கிடையிலான தொடர்புகளை வலுவூட்டுவதற்காக சுற்றுலாத்துறை புரிந்துணர்வு தொடர்பில் இலங்கை அரசாங்கத்திற்கும் கம்போடியா அரசாங்கத்திற்கும் இடையில் புரிந்துணர்வு உடன்படிக்கையை எட்டுவதற்காக சுற்றுலா அபிவிருத்தி வனஜீவராசிகள் மற்றும் கிறிஸ்தவ மத அலுவல்கள் அமைச்சர் அவர்கள் சமர்ப்பித்த ஆவணத்திற்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது.

04. மின்சக்தி தொழில்நுட்ப ஊழியர்களுக்கு அனுமதி பத்திரமுறையொன்றை அறிமுகப்படுத்துதல் (நிகழ்ச்சி நிரலில் 19ஆவது விடயம்)
உரிய தரத்தைக்கொண்ட மின்சார கட்டமைப்பை அமைப்பதன் மூலம் மின்சார பாவனையாளர்களுக்கு பாதுகாப்புடனான சேவையை வழங்குவதைப் போன்று மின்சார தொழில்நுட்பவியலாளர்களுக்கு முறையான தொழிலாக அடையாளங்கண்டு அவர்களுக்கு கூடுதலான தொழில் வாய்ப்பிற்கான சந்தர்ப்பம் மற்றும் கோரிக்கையை ஏற்படுத்தும் நோக்கில் கொடகேன மின்சார தொழில்நுட்ப ஊழியர்களுக்கு (மின்சக்தி தொழில்நுட்பவியலாளர்கள்) தொழில் அனுமதிபத்திரமொன்றை 2019ஆம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் தொடக்கம் நடைமுறைப்படுத்துவதற்கும் இந்த அனுமதி பத்திரமுறையை நடைமுறைப்படுத்துவதற்காக இலங்கை பொதுமக்கள் பயன்பாட்டு சபையும் நிர்மாணத்துறை அபிவிருத்தி நிறுவனங்களின் அங்கத்தவர்களைக் கொண்ட தொழில்நுட்ப அனுமதி பத்திர முறையை வலுப்படுத்துவதற்கும் மதிப்பீடுகளை மேற்கொள்வதற்கு குழுக்களை நியமிப்பதற்காக தேசிய கொள்கை பொருளாதார அலுவல்கள் மீள் குடியமர்வு புனர்வாழ்வு வடமாகாண அபிவிருத்தி மற்றும் இளைஞர் அலுவல்கள் அமைச்சர் அவர்கள் நிதியமைச்சர் அவர்கள் மற்றும் வீடமைப்பு நிரமாணத்துறை மற்றும் கலாசார அலுவல்கள் அமைச்சர் ஆகியோரினால் சமர்ப்பிக்கப்பட்ட கூட்டு ஆலோசனைக்கு அமைச்சரவையினால் அங்கீகாரம் வழங்கப்பட்டுள்ளது.

05. இடைக்கால கணக்கறிக்கை - 2020 (நிகழ்ச்சி நிரலில் 20ஆவது விடயம்)
2019அம் ஆண்டுக்கான இறுதி காலாண்டில் ஜனாதிபதி தேர்தலொன்றை நடத்த வேண்டி இருப்பதினால் இதன் பின்னர் தெரிவாகும் புதிய அமைச்சரவைக்கு அமைவாகவும் அரசாங்கத்தின் புதிய கொள்கையை அடிப்படையாகக் கொண்டு 2020ஆம் ஆண்டுக்கான வரவு செலவு திட்டத்தை தயாரிக்கக்கூடிய வகையில் 2020 ஆம்ஆண்டுக்கான வரவு செலவு திட்டப் பணிகளை ஆரம்பிப்பதற்கு முன்னதாக ஒத்திவைத்து 2020ஆம் ஆண்டில் முதல் 4 மாத காலப்பகுதிக்காக அரசாங்கத்தை முன்னெடுப்பதற்குத் தேவையான செலவை உள்ளடக்கி இடைக்கால கணக்கறிக்கை தயாரித்து பாராளுமன்றத்தின் அங்கீகாரத்தை பெற்றுக் கொள்வதற்காக செயல்படுவதற்கென நிதி அமைச்சர் அவர்கள் சமர்ப்பித்த ஆவணத்திற்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது.

06. நிதி திருத்த சட்ட மூலம் - 2019 (நிகழ்ச்சி நிரலில் 21ஆவது விடயம்)
2019ஆம் ஆண்டு வரவு செலவ திட்டத்தில் உள்ளடக்கப்பட்ட வருமானம் குறித்த ஆலோசனைகளை உள்ளடக்கிய திருத்தங்களை நடைமுறைப்படுத்துவதற்காக மோட்டார் வாகங்கள் மீது ஆடம்பர வரி அறவிடுவதற்காக வேன் தனிப்பட்ட கெப் வாகனம் இரட்டை கெப் வாகனம் மோட்டார் சைக்கிள் மோட்டார் சைக்கிள் முச்சக்கர வண்டி போன்ற பயணிகளின் போக்குவரத்து வாகனங்கள் லொறி வாகனங்கள் ட்ரக்டர் கை ட்ரக்டர் டெலர் முதலான பொருட்களை எடுத்துச்செல்வதற்கான வாகனங்கள் அம்புலன்ஸ் வாகனங்கள் மரண சடலங்களுக்கான வாகனங்கள் தவிர்ந்த எத்தகைய வாகனங்களையும் உள்ளடக்கிய வகையில் வரையறுத்துக் குறிக்கப்பட்ட மோட்டார் வாகனம் என்பது அர்த்தப்படுத்தும் திருத்தத்தை மேற்கொள்வதற்காகவும் கடன் ஆவணம் மற்றும் பொறுப்பேற்கப்பட்ட பயன்படுத்தப்பட்ட பொருட்கள் மற்றும் சேவைகளை கொள்வனவ செய்வதற்காக இலங்கைக்கு அப்பால் மேற்கொள்ளப்படும் கொடுப்பனவு அடிப்படையிலான 3.5 வீத வெளிநாட்டு வர்த்தக கொடுக்கல் வாங்கல் அடிப்படையில் அறவீட்டும் வரியை விதிப்பதற்காகவும் 2018ஆம் ஆண்டு இல 35 கீழான நிதி சட்டத்தில் திருத்தத்தை மேற்கொள்வதற்கான நிதி திருத்த சட்டமூலத்திற்கு பாராளுமன்றத்தின் அங்கீகாரத்திற்காக சமர்ப்பிப்பதற்கு நிதி அமைச்சர் அவர்களினால் சமர்ப்பிக்கப்பட்டட பரிந்துரைக்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது.

07. ஸ்ரீலங்கன் கேட்டரிங் லிமிடட்டின் விமான சமையலை விரிவுபடுத்தும் திட்டம் (நிகழ்ச்சி நிரலில் 22ஆவது விடயம்)
தற்பொழுது மேற்கொள்ளப்படும் விமான நிலைய விரிவுபடுத்தும் திட்டத்;திற்கு அமைவாக ஸ்ரீலங்கன் கேட்டரிங்கினால் 40ஆயிரம் சாப்பாடுகளை நாளாந்தம் விநியோகிக்கக்கூடிய வகையில் ஸ்ரீலங்கன் கேட்டரிங்கிற்காக விசேடமாக நிர்மாணிக்கப்பட்டுள்ள நவீன சமையலறையை விரிவுபடுத்தும் தேவை இருப்பதினால் ஸ்ரீலங்கன் கேட்டரிங் சுற்றாடலுக்கு அருகாமையில் மேலும் 150 பேர்ச் காணி யொன்றை இலங்கை விமான நிலையம் மற்றும் விமான சேவை நிறுவனத்தின் மூலம் பெற்றுக் கொண்டு விமான பயணிகளுக்கு உணவு முதலானவற்றை விநியோகிக்கும் தேவைக்காக விமான சமையலறையை விரிவுபடுத்துவதற்கு 250மில்லியன் ரூபாவாக மதிப்பீடு செய்யப்பட்டுள்ள திட்டத்தை நடைமுறைப்படத்துவதற்காக நிதியமைச்சர் அவர்களினால் சமர்ப்பிக்கப்பட்ட ஆவணத்திற்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது.

08. பேராதனை பல்கலைக்கழகம் ஸ்ரீஜயவர்தனபுர பல்கலைக்கழகம் கொழும்பு பல்கலைக்கழகம் மற்றும் களனி பல்கலைக்கழகம் ஆகியவற்றின் ஊடாக வெளிநாட்டு நிறுவனங்களுடன் ஏற்படுத்திக் கொள்ளப்படவுள்ள மானிய உடன்படிக்கை (நிகழ்ச்சி நிரலில் 23ஆவது விடயம்)
பேராதனை பல்கலைக்;கழகம் மற்றும் ஸ்ரீ ஜயவர்தனபுர பல்கலைக்கழகம் மற்றும் தாய்லாந்தின் தொழில்நுட்பம் தொடர்பான ஆசிய நிறுவனத்திற்கு இடையில் விஞ்ஞான மற்றும் தரவு அறிவியல் தொடர்பான கற்கைநெறியை மேம்படுத்துவது தொடர்பில் முக்கிய உடன்படிக்கை இரண்டையும் கொழும்பு பல்கலைக்கழகம் மற்றும் அவுஸ்திரேலியாவின் கிராஸ் பல்கலைக்கழகத்திற்கு இடையில் தெற்காசியாவிற்கான நடப்பு கற்பித்தல் ஆற்றல் தொடர்பில் முக்கிய உடன்படிக்கையிலும் களனி பல்கலைக்கழகம் மற்றும் இம்பிரியல் பல்கலைக்கழகத்தின் விஞ்ஞானம் தொழில்நுட்பம் மற்றும் மருத்துவம் தொடர்பான ஆய்வு அலுவலகத்திற்கு இடையில் பொருட்களை பரிமாறுவது தொடர்பிலான முக்கிய உடன்படிக்கையும் எட்டுவதற்காக இதன் பல்கலைக்கழகங்களின் உபவேந்தர்களுக்கு அதிகாரத்தை வழங்குவதற்காக நகர திட்டமிடல் நீர்விநியோகம் மற்றும் உயர்கல்வி அமைச்சர் அவர்கள் சமர்ப்பித்த ஆவணத்திற்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது.

09. இலங்கை உளவியல் சங்கத்தை கூட்டிணைத்தல் (நிகழ்ச்சி நிரலில் 25ஆவது விடயம்)
இலங்கை உளவியல் சங்கத்தை கூட்டிணைப்பதற்காக பாராளுமன்ற உறுப்பினர் திலங்க சுமதிபால அவர்களினால் தனிப்பட்ட பாராளுமன்ற திருத்த சட்டமூலமொன்று பாராளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்டுள்ளது. இதற்கமைவாக சட்ட வரைவு தொடர்பான அமைச்சரவையின் துணைக்குழுவின் சிபாரிசின் அடிப்படையில் திருத்த சட்ட வரைவு பிரிவினால் திருத்த சட்ட மூலம் மேற்கொள்ளப்பட்டுள்ள உத்தேச திருத்த சட்ட மூலத்தை பாராளுமன்றத்தில் சமர்ப்பிப்பதற்கும் மும்மொழில் அரசாங்கத்தின் வர்த்தமானியில் வெளியிடுவதற்குமாக சுகாதார போஷாக்கு மற்றும் சுதேசிய வைத்திய துறை அமைச்சர் அவர்களினால் சமர்ப்பிக்கப்பட்டட ஆவணத்திற்கு அமைச்சரவை அங்கிகாரம் வழங்கியுள்ளது.

10. இரத்த சோகை மற்றும் இரத்த சோகை தொடர்பான பிரச்சினைகளை குறைத்துக்கொள்வதற்காக பொதுவாக பயன்படுத்தப்படும் முக்கிய இரும்பு சத்துடனான உணவு மற்றும் போலிக் அமிலம் பயன்படுத்தப்பட்ட போஷாக்குள்ள உணவை மேற்கொள்ளுதல் (நிகழ்ச்சி நிரலில் 26ஆவது விடயம்)
அமைச்சரவையினால் இதற்கு முன்னர் வழங்கப்பட்டிருந்த அங்கீகாரத்திற்கு அமைவாக அரிசி மற்றும் கோதுமை மாவில் இரும்பு சத்து மற்றும் போலிக் அமிலத்தை ஒன்று சேர்த்து போஷாக்குடனான உணவு வேலைத்திட்டமொன்றை நடைமுறைப்படுத்துவது தொடர்பில் ஆய்வு செய்து அறிக்கை சமர்ப்பிப்பதற்காக அதிகாரிகளைக் கொண்ட குழுவொன்று நியமிக்கப்பட்டுள்ளது. இதற்கமைவாக இரும்பு சத்து மற்றும் போலிக் அமிலத்தை பயன்படுத்தி அரிசி மற்றும் கோதுமை மா உள்ளிட்ட பிரதான போஷாக்குள்ள உணவை பாடசாலை பகலுணவு வேலைத்திட்டத்தில் முன்னெடுக்கப்படுவதை ஆய்வு செய்து பாராட்டுதல் மற்றும் போஷாக்குள்ள அரிசி முதலான தானியங்களை நாட்டில் உற்பத்தி செய்தல் தொடர்பிலான அந்தக் குழுவின் சிபாரிசுகளை நடைமுறைப்படுத்துவதற்காக சுகாதார போஷாக்கு மற்றும் சுதேசிய வைத்திய துறை அமைச்சர் அவர்களினால் சமர்ப்பிக்கப்பட்டட ஆவணத்திற்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளத.

11. நெல் உற்பத்தி காணிகளின் நீர் மற்றும் சுற்றாடல் கட்டமைப்பு தொடர்பாக சர்வதேச வலைப்பின்னலின் 17ஆவத செயற்பாட்டக் குழுவின் கூட்டம் மற்றும் மகாநாடு (நிகழ்ச்சி நிரலில் 39ஆவது விடயம்)
நெல் உற்பத்தி காணிகளில் சுற்றாடல் கட்டமைப்பில் நம்பிக்கையுறுதியுடன் கவனம் செலுத்தி உரிய நீர்முகாமைத்துவம் ஒன்றை முன்னெடுக்கும் நோக்கத்தை அடிப்படையாகக் கொண்டு நெல் உற்பத்தி காணிகளில் நீர் மற்றும் சுற்றாடல் கட்டமைப்பு தொடர்பான 'சர்வதேச நீர் வலைப்பின்னல் 2004' அமைக்கப்பட்டது. இந்த மன்றத்தின் 17ஆவது நடவடிக்கை குழுவின் கூட்டத்தையும் வருடாந்த மகாநாட்டையும் அமைப்பின் அங்கத்துவ நாடுகள் மற்றும் பிரதிநிதித்துவ நிறுவனங்களின் பங்களிப்புடன் 2020ஆம் ஆண்டு நவம்பர் மாதம் கொழும்பில் நடத்துவதற்கும் அதற்குத் தேவையான நிதியை பெற்றுக் கொள்வதற்குமாக விவசாய கிராமிய பொருளாதார அலுவல்கள் நீர்பாசன மற்றும் கடற்றொழில் நீரியியல் வள அமைச்சரினால் சமர்ப்பிக்கப்பட்ட ஆவணத்திற்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது.

12. விலங்குகளின் உணவுக்காக தேவையான சோளத்தை இறக்குமதி செய்தல் (நிகழ்ச்சி நிரலில் 40ஆவது விடயம்)
2019ஆம் ஆண்டில் சோள உற்பத்தி போதுமானதாக இல்லை என்பதினால் மிருக உணவு உற்பத்திக்காக 80ஆயிரம் மெற்றிக் தொன் சோளத்தை இறக்குமதி செய்வதற்கான தேவை இருப்பதாக அடையாளங் காணப்பட்டுள்ளது. இதற்காக முதலாவதாக விவசாயம் கிராமிய பொருளாதார அலுவல்கள் நீர்பாசனம் மற்றும் கடற்றொழில் மற்றும் நீரியியல் வள அபிவிருத்தி அமைச்சரின் சிபாரிசின் அடிப்படையில் தேசிய உணவு மேம்பாட்டு சபையினால் 50ஆயிரம் மெற்றிக் தொன் சோளத்தை இறக்குமதி செய்து கால்நடை நிருவாகத்தில் ஈடுபட்டுள்ள நிறுவனங்களின் கோரிக்கையின் அடிப்படையில் விநியோகிப்பதற்கும் இரண்டாவதாக எஞ்சியுள்ள சோளத்தை தேவைப்படும் ஒவ்வொரு நிறுவனங்களினாலும் தயாரிக்கப்படும் விலங்கு உணவின் அளவு மற்றும் வளர்க்கப்படும் மிருகங்களின் அடிப்படையில் விலங்குகளின் உற்பத்தி மற்றும் சுகாதார திணைக்களத்தில் பதிவு செய்யப்பட்ட கால்நடை உணவு தயாரிப்பாளர்கள் மற்றும் கோழி விற்பனை வியாபாரிகளுக்கு 2020 ஜனவரி மாதம் 31ஆம் திகதிக்கு முன்னர் இறக்குமதி செய்து கொள்வதற்கான அனுமதியை பெற்றுக் கொடுப்பதற்கும் இதற்காக 1 கிலோ சோளத்திற்கு 10ரூபா விசேட வர்த்தக பொருட்கள் வரியை விதிப்பதற்கும் விவசாய திணைக்களத்தின் மூலம் சோள உற்பத்தியில் ஈடுபடுவதற்கான ஊக்குவிப்பு முறையொன்றை ஏற்படுத்தி உற்பத்தியில் ஈடுவோருக்கு இலவசமாக விதைகளை வழங்குவதற்காகவும் விவசாயம் கிராமிய பொருளாதார அலுவல்கள் நீர்பாசனம் மற்றும் நீரியல் வள அபிவிருத்தி அமைச்சர் அவர்கள் சமர்ப்பித்த ஆவணத்திற்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது.

13. தேசிய போக்குவரத்து வைத்திய நிறுவனத்தின் கிளை அலுலகத்திற்கு புதிய கட்டிடமொன்றை நிர்மாணித்தல் (நிகழ்ச்சி நிரலில் 44ஆவது விடயம்)
போக்குவரத்து மற்றும் சிவில் விமான சேவைகள் அமைச்சுக்குட்பட்ட சுயாதீன நிறுவனமாக செயற்படும் தேசிய போக்குவரத்து வைத்திய நிறுவனத்தின் பணியாளர்கள் 2009அம் ஆண்டு தொடக்கம் பெற்றுக்கொண்ட டுiபாவ வாகன அனுமதி பத்திரத்தை புதுப்பித்தல் 2017ஆம் ஆண்டில் மார்ச் மாதம் தொடக்கம் ஆரம்பிக்கப்பட்டதினால் மேலும் விரிவுபடுத்தப்பட்டுள்ளது. இதனால் மிகவும் செயல்திறன் மிக்கதாகவும் பயனுள்ள சேவையை வழங்குவதற்காக நாடுமுழுவதிலுமுள்ள 25 கிளை அலுவலகங்கள் அமைக்கப்பட்டுள்ளதுடன் கம்பஹா வெரஹர குருநாகல் கண்டி மற்றும் அநுராதபுர கிளை அலுவலகங்களிற்காக கூடுதலான சேவை பயனாளிகள் வருகின்றனர். இதற்கமைவாக முறையான பெறுகை நடைமுறையை கடைபிடித்து தேசிய போக்குவரத்து வைத்திய நிறுவனத்தின் நிதியை பயன்படுத்தி வெரஹர குருநாகல் மற்றும் அநுராதபுரம் கிளைகளுக்காக முன்னர் அமைக்கப்பட்ட கட்டிடம் கம்பஹா மற்றும் கண்டி கிளைகளுக்காக நிரந்தர கட்டிடங்களை நிர்மாணிப்பதற்காக போக்குவரத்து மற்றும் சிவில் விமான சேவைகள் அமைச்சர் அவர்களினால் சமர்ப்பிக்கப்பட்ட ஆவணத்திற்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது.

14. பசுமை எரிசக்தி அபிவிருத்தி மற்றும் எரிசக்தி செயல்திறனை மேம்படுத்தும் முதலீட்டு வேலைத்திட்டத்தி;ன் கீழ் மொனராகலை நீர் மின் உற்பத்தியை நிலையத்தை அமைத்தல் (நிகழ்ச்சி நிரலில் 65ஆவது விடயம்)
மொரகொல்ல நீர் மின் உற்பத்தி நிலையத்தை அமைத்தல் - லோட் யு2 – பிரதான சிவில் பணிகளுக்கான கேள்வி மனு அமைச்சரவையினால் நியமிக்கப்பட்ட நிலையியற் பெறுகைக்குழவின் சிபாரிசுக்கு அமைவாக ஊhiயெ புநணாழரடிய புசழரி உழ டiஅவைநன ழக வுழறநச கு. ழுஉநயn ஐவெநசயெவழையெட ஊநவெநச 2008 உலைரளெi டீநடைi ஊhயழலயபெ னுளைவசiஉவ . டீநதைiபெ ஊhiயெ என்ற நிறவனத்திடம் வழங்குவதற்காக மின்சக்தி எரிசக்தி மற்றும் வர்த்தக அபிவிருத்தி அமைச்சர் அவர்கள் சமர்ப்பித்த ஆவணத்திற்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது.

15. உரப் பெறுகையை மேற்கொள்ளல் 2019 (செப்டம்பர் மாதம்) (நிகழ்ச்சி நிரலில் 67ஆவது விடயம்)வரையறுக்கப்பட்ட இலங்கை உர நிறுவனம் மற்றும் வரையறுக்கப்பட்ட கொழும்பு கொமர்ஷல் உர நிறுவனம் செப்டம்பர் மாதத்திற்கான உரத்தின் தேவையை விநியோகிப்பதற்காக 30ஆயிரம் மெற்றிக் தொன் யூரியா (கிரனியுலா) வை 1 மெற்றிக் தொன் 315.80 அமெரிக்க டொலர் என்ற அடிப்படையிலும் அக்ரிபேர்ட் லைவன் இன்டர்னெஷனல் பிரைவட் லிமிடட்டிடமும் 20ஆயிரம் மெற்றிக்தொன் மியுரேட் ஒப் பொடேஸை 343.10 அமெரிக்க டொலர் வீதமும் சுவிஸ் சிங்கப்பூர் ஓவர்சீஸ் என்டர்பிரைஸ் பிரைவேட் லிமிடெட் நிறுவனத்திடமும் பெறகையை மேற்கொள்வதற்காக அனுமதியை பெற்றுக் கொள்ளும் பொருட்டு விவசாய கிராமிய பொருளாதார அலுவல்கள் நீர்பாசனம் மற்றும் கடற்றொழில் நீரியல் வள அமைச்சர் அவர்கள் சமர்ப்பித்த ஆவணத்திற்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது.

16. ஆசிய அபிவிருத்தி வங்கியினால் நிதியுதவியின் கீழ் கோபுர கட்டமைப்ப மீது நிர்மாணிக்கப்படும் துறைமுக நுழைவாயில் திட்டத்திற்கான சிவில் பணி ஒப்பந்தத்தை வழங்குதல் (நிகழ்ச்சி நிரலில் 68ஆவது விடயம்)
ஆசிய அபிவிருத்தி வங்கியினால் நிதி வழங்கப்படும் கோபுர கட்டமைப்பில் நிர்மாணிக்கப்படும் துறைமுக நுழைவாயில் வீதி திட்டத்தின் சிவில் பணி ஒப்பந்தம் அமைச்சரவையினால் நியமிக்கப்பட்ட நிலையியற் பெறுகைக்கழுவின் சிபாரிசுக்கமைய ஊhiயெ ஊiஎடை நுபெiநெநசiபெ ஊழளெவசரஉவழைn ஊழசிழசயவழைnஇ ர்ரடிநi Pசழஎinஉயைட சுழயன யனெ டீசனைபந புசழரி ஊழ. டுவன யனெ ர்நயெn Pசழஎinஉயைட ஐளெவவைரவந ழக ஊழஅஅரniஉயவழைளெ Pடயnniபெ யனெ னுநளபைn ஐளெவவைரவந ஊழ. டுவன. என்ற நிறுவனத்திடம் வழங்குவதற்காக பெருந்தெருக்கள் மற்றும் வீதி அபிவிருத்தி மற்றும் கனிய வள அபிவிருத்தி அமைச்சர் அவர்கள் சமர்ப்பித்த ஆவணத்திற்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது.

17. 2020ஆம் ஆண்டில் இலவசமாக விநியோகிப்பதற்கு தேவையான பாடசாலை புத்தகங்களை அச்சிடுவதற்காக அச்சகங்களிடம் கையளித்தல் (நிகழ்ச்சி நிரலில் 73ஆவது விடயம்)
அச்சு நிறுவனங்களினால் 2020ஆம் ஆண்டுக்காக நூல்களை அச்சிடுவதற்காக பகிரங்க பெறுகை நடைமுறைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன. இதற்கமைவாக கேள்வி மனுக்களை சமர்ப்பித்தவர்களுள் ஆகக்குறைந்த கேள்வி மனுக்களில் பேரம் பேசுதலுக்கு அமைவாக கல்வி வெளியீட்டுத் திணைக்களத்தின் கேள்வி விலைக்கு கேள்வி மனுதாரர்களின் அச்சு வலு மற்றும் குறிப்பிட்ட காலத்திற்கு விநியோகித்தல் போன்ற விடயங்களும் அமைச்சரவை பெறுகைக்குழவின் சிபாரிசுகளை கவனத்தில் கொண்டு தெரிவுசெய்யப்பட்ட 29 அச்சு நிறுவனங்கள் ஊடாக பாடப்புத்தகங்களை அச்சிடுவதற்காக சிபாரிசு செய்யப்பட்டுள்ளது. இதனால் 2020ஆம் ஆண்டுக்காக பாடசாலைகளுக்கு விநியோகிக்கப்படவுள்ள பாடப்புத்தகங்கள் அமைச்சரவை பெறுகைக்குழுவினால் சிபாரிசு செய்யப்பட்டுள்ள பெறுகைக் கால அட்டவணைக்காக 2019ஆம் ஆண்டு நவம்பர் மாதம் 30ஆம் திகதிக்கு முன்னர் பாடசாலைகளுக்கு விநியோகிகக்கக்கூடிய வகையில் மேற்படி 29 அச்சு நிறுவனங்களுக்கு வழங்கி 386 பாடப்புத்தக வகைகளின் 33 712 100 அளவிலான பிரதிகளை 398 2299 535.00 ரூபாவை ஒதுக்கீடு செய்து அச்சிடுவதற்காக கல்வி அமைச்சரினால் சமர்ப்பிக்கப்பட்ட ஆவணத்திற்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது.