Saturday, August 17, 2019

உலகமயமாக்கலும் வளர்முக நாடுகளும் 2019

SHARE

இருபத்தியோராம் நூற்றாண்டில் அனைத்துலகநாடுகளிலும் பேசப்படும் முக்கியமான விடயங்களில் ஒன்றாக உலமயமாக்கல் என்னும் செயற்திட்டம் காணப்படுகின்றது. முக்கியமாக மேலை நாடுகள் உலமயமாக்கல் பற்றிய கருத்துக்களை விதைப்பதில் முக்கிய பங்காற்றுகின்றன.

உலமயமாக்கல் என்னும் பதத்திற்கு தேவைக்கேற்ப பலவித அர்த்தங்கள் கொடுக்கப்படுகின்றன. உலக நாடுகளுக்கிடையேயும், மக்களுக்கிடையேயும் காணப்படும் பொருளாதார, தொழில்நுட்ப, அரசியல், காலாச்சார மற்றும் சமுக கட்டமைப்புகளிற்கேற்ப இணைவாக்ப்பட்டதாகவும், அல்லது மாறுபடும் தன்னை கொண்டதாகவும் உலமயமாக்கல் கொள்கை காணப்படுகின்றது என்று கூறினால் மிகையாகாது.

நாடுகளுக்கிடையேயான தூரம்; குறைக்கப்பட்டு அனைத்து தொடர்பாடல்களும் சிரமமின்றி மேற்கொள்ளக் கூடிய வகையில் செய்திப்பரிமாற்றம் சீரிய முறையில் வடிவமைக்கப்பட்டுள்ளதே உலமயமாக்கல் கொள்கையை முழு வீச்சுடன் முன்னெடுக்க முக்கிய காரணமாக உள்ளது. உற்பத்ததிப் பொருட்களைச் சந்தைப்படுத்தவும், சிரமமின்றி நாட்டுக்கு நாடு பிரயாணம் செய்யவும், மின் வலையின் உதவியால் தகவல் பரிமாற்றங்களை மேற் கொள்ளவும் கிடைத்த அரிய வாய்ப்பைக் கொண்டே வர்த்தகமும் மற்றும் அரசியல் தொடர்புகளும் உலக நாடுகளுக்கிடையே மேற்கொள்ளப்படுகின்றன. கடந்த காலங்களில் தகவல் நுட்பத்துறையில் ஏற்படுத்தப்பட்ட அதியத்தக்க தக்க அசுர வழற்சியே உலமயமாக்கலின் உந்து சக்தியாக விளங்குகின்றது.

இருபதாம் நூற்றாண்டுகளின் பிற்பகுதியில் தகவல் தொழில் நுட்பம் தனது விரைவான முன்னேற்றத்தை ஆரம்பித்து எதிர்பார்த்திருக்காத அளவில் வழற்சி அடைந்து இன்று அனைவரையும் ஆட்கொண்டுவிட்டதுடன் மேலும் முன்னேறிச் சென்று கொண்டிருக்கின்றது. உலமயமாக்கல் கொள்கையானது பல தரப்பட்ட பயன்பாடைக் கொண்டிருந்தாலும் பொருளாதராத்தைக் குறியாகவைத்தே விரைவாக செல்வதை அவதானிக்க முடிகிறது. குறைந்த செலவில் கூடிய வருவாயைப் பெறுவதே... என்று சுரங்கக் கூறினால் மிகையாகாது. எதிலும் உண்டாகக் கூடிய சாதக பாதகமான விளைவுகள் உலமயமாக்கல் கொள்கையிலும் காணப்படுகின்ற காரணத்தால் இத் திட்டத்திற்கு கிடைக்கும் ஆதரவு போல கணிசமான அளவு எதிப்பும் இருப்பதை ஏற்றுக் கொண்டேயாகவேண்டும்.

இலத்திரனியல் தொழில்நுட்பத்துறையில் அபார வளற்சியடைந்த தனியார் துறை நிறுவனங்கள் தங்கள் அலுவலகங்களையும், வாடிக்கையாளார் ஆலொசனை மையங்களையும் கீழைத்தேய நாடுகளிற்கும், வளர்முகநாடுகளிற்கும் நகர்த்துவதன் முலம் குறைந்த செலவில் கூடிய வருவாயைப் பெறுவதோடு அந்த நாடுகளில் காணப்படும் வேலை இல்லாப் பிரச்சினைகளிற்கும் தீர்வை ஏற்படுத்திக் கொடுப்பது வெளிப்படையான விடயம். இந் நிறுவனங்கள் அனேகமானவை இலகுவான உரையடலுக்கு ஏதுவாக ஆங்கில மொழி பேசப்படும் நாடுகளிற்கே முன்னுரிமை கொடுத்து தொழிற்படுகின்றன. முக்கிய காரணமாக அனேகமான தொழில் நிறுவனங்களின் வாடிக்கையாளர்களும் ஆங்கில மொழியிலேயே தங்கள் தொடர்பைப் பேண விரும்புவதும் முக்கிய காரணமாகும்.

இதனால் தான் இன்று ஜரோப்பாவில் அல்லது வட அமரிக்காவிலன் ஒரு அலுவலகத்தில், அல்லது வீட்டில் ஒருவரின் கணணித் தொழிற்பாட்டில் ஏற்படும் தடங்கலை நிவர்த்தி செய்ய தொலைபேசி அழைப்பை ஏற்படுத்தினால் மறுமுனையில் உதவி வழங்குபவர் தென்னாபிரிக்காவில் இருந்து உரையாடுவதையும். அல்லது தடைப்பட்ட இணையத்தள தொடர்பைப்பெற தொலைபேசியில் உதவிக்கு அழைத்தால் மறுமுனையில் இருப்பவர் இந்தியாவின் ஒரு மாநிலத்தில் இருப்பதையோ அறியக்கூடியதாக இருக்கின்றது. இவற்றுக்கு முக்கிய காரணம் சீரான தொடர்பு பேணப்படுவதோடு தகுதி வாய்த பல திறமைசாலிகள் இந் நாடுகளில் அணியணியாக உருவாகுவதுமேயாகும்.

உயர்கல்வியை நிறைவு செய்துவிட்டு வேலை பெற முடியாமல் தவிக்கும் பட்டதாரிகளிற்கு அவர்கள் நாட்டிற்கே தெடிச்சென்று தொழில் வாய்ப்பு அளிக்கும் இவ் அரியபணி உலகமயமாக்கலின் ஒரு அங்கமேயாகும். அரசியல்ரீதியாக பெரிய நிறுவனங்கள் வளர்முக நாடுகளுடன் ஏற்படுத்திக் கொள்ளும் ஒப்பந்தங்களின் அடிப்படையில் சில சலுகைகளை பெற்றுக் கொண்டாலும், அந்நாடுகளின் பொருளாதாரத்தை உயர்த்த உதவுவதுடன், தொழில் வாய்ப்பை எதிர்பார்த்திருப்போருக்கு இந் நிறுவனங்களின் வரவு பெரும் வரப்பிரசாதமாக அமைகின்றன.

இத்திட்டங்களிற்கு உண்டாகிவரும் எதிர்ப்பை சற்று நோக்குவொமேயானால,; வளர்முக நாடுகளின் வருகை என்பது உள்ளுர் அரசியல் நிலையைப் பொறுத்தவரையில் சர்வதேச நிறுவனங்களில் தங்கி இருக்க நேரிடும் என்ற தயக்கமும், தங்கள் அரசியல், பொருளாதார பலத்தில் தளர்வு உண்டாகின்றது என்ற விவாதமும் முன்வைக்கப்படுகின்றது.

வசதிகளின் அடிப்படையில் குறிப்பிட்ட சில இடங்களிலேயே தொழில் வாய்புகள் கிடைக்க் கூடிய வாய்ப்புகள் இருப்பதனால், பல காலமாகக் குடும்பக்கட்டமைப்புக்குள் வாழ்ந்து பழகிய இளையவர்கள் தொழில் நிமிர்த்தம் அதிக தூரம் இடம் பெயர்ந்து தங்கள் வயது ஒத்தவர்களுடன் வசிக்கப் நிர்பந்திக்கப் படுகின்றனர். அத்துடன் உலக நாடுகளிற்கிடையே உள்ள மாறுபட்ட நேர வித்தியாசத்திற்கேற்ப தொழில் புரிய வேண்டிய கட்டாயம் ஏற்படுவதால், உடல் ஆரொக்கியம் குறைவடைவதும், மன அழுத்தம் ஏற்படுவதும் தவிர்க முடியாத ஒன்றாகிவிடுகின்றது. மனதில் ஏற்படும் இன்ப துன்பம் இரண்டையும் மற்றவருடன் பகிர்ந்து கொள்ளவும், பொழுது போக்காகன நேரத்தையும் சக தொழிலாளருடனேயே பகிர்ந்து கொள்ள வேண்டிய கட்டாயமும் ஏற்படுகிறது. இவற்றின் காரணமாக, குடும்பக் கட்டமைப்புகளிற்க்குள்ளும், வாழ்க்கை முறைகளிலும் மாறுதல்கள் ஏற்படுவதுடன், இவ்வகையான வாழ்க்கை முறை ஏற்கனவே காணப்படும் மேற்குலக நாகரீகத்தைப் பின்பற்றி கலாச்சார மாற்றங்கள் ஏற்படலாம் என்ற அச்ச உணர்வும் தலைதூக்கி உள்ளதைக் காணக் கூடியதாக உள்ளது.

எங்கும், எதிலும் நன்னை தீமை உண்டாகும் என்பது உலகமயமாக்கல் என்ற செயற்த்திட்டத்திலும் உள்ளதை அவதானத்துடன் அணுகி, பன்முகப் படுத்தப்பட்ட அடிப்படையில் அமைந்திருக்கும் இச் செயற்திட்டங்களின் அனுகூலங்களையும் எதிர்வு விளைவுகளையும் சமன் செய்து சீர் தூக்கிப் பார்ப்பாதன் மூலமாக நற்பயனை அடையலாம்.
SHARE

Author: verified_user

0 comments: